2013-01-31 15:43:24

அலகாபாத் ஆயர் பதவி விலகும் கோரிக்கை திருத்தந்தையால் ஏற்பு


சன.31,2013. கடந்த 24 ஆண்டுகளாக அலகாபாத் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் இஸிடோர் பெர்னான்டெஸ் அவர்கள் பதவி விலக விரும்பி அனுப்பிய கோரிக்கையை திருச்சட்டம் 401, 2ம் பிரிவின்படி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று ஏற்றுக்கொண்டார்.
ஆயர் பெர்னான்டெஸ் அவர்களுக்குப் பதிலாக, ஒய்வு பெற்ற ஆஜ்மீர் ஆயர் இக்னேசியஸ் மெனெசெஸ் அவர்களை அலகாபாத் மறைமாவட்ட மேற்பார்வையாளராக, திருத்தந்தை நியமித்துள்ளார்.
1947ம் ஆண்டு மங்களூரில் பிறந்த ஆயர் இஸிடோர் பெர்னான்டெஸ், 1972ம் ஆண்டு குருவாகவும், 1988ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே, அண்மையில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட சீரோ மலங்கரா தலைமைப் பேராயர் Baselios Cleemis Thottunkal அவர்களை, கீழைரீதி திருப்பேராயத்தின் உறுப்பினராகவும், பல்சமய உரையாடல் அவையின் உறுப்பினராகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.