எருசலேம் நகரில் வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் நல்லுறவு
வளர்க்கும் கூட்டம்
சன.30,2013. திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உறவுகளை வளர்க்கும் ஒரு
முயற்சியாக, இவ்விரு தரப்பின் பிரதிநிதிகள் இச்செவ்வாயன்று எருசலேம் நகரில் சந்தித்தனர். திருப்பீட
நாடுகளுடனான உறவுகளின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Ettore Balestrero தலைமையில்
சென்றிருந்த வத்திக்கான் பிரதிநிதிகளுக்கும், இஸ்ரேல் அரசின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
Daniel Ayalon தலைமையில் வந்திருந்த இஸ்ரேல் அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே இக்கூட்டம்
நடைபெற்றது. வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு
இன்னும் வலுப்பெறுவதற்கான வழிமுறைகள் இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இவ்விரு தரப்பினருக்கும்
இடையே இவ்வாண்டு ஜூன் மாதம் வத்திக்கானில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.