கடந்த ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்களூக்கு எதிரான தாக்குதல்கள் 135
சன.28,2013. கடந்த ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 135 தாக்குதல்கள் இடம்பெற்றதாக
அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் சனவரி
மாதம் 23ம் தேதி ஒடிஸ்ஸாவில் தன் இரு மகன்களோடு எரித்துக்கொல்லப்பட்ட கிறிஸ்தவ மறைபோதகர்
கிரஹாம் ஸ்டெயின்ஸின் மரண நினைவு நாளையொட்டி வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, கிறிஸ்தவர்களுக்கு
எதிராக கடந்த ஆண்டு இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும்பான்மையானவை பி.ஜே.பி. க்ட்சி ஆட்சி
புரியும் மாநிலங்களில் இடம்பெற்றன எனவும் தெரிவிக்கிறது. 2012ம் ஆண்டில், கர்நாடகாவில்
41, ஒடிஸ்ஸாவில் 16, தமிழ்நாட்டில் 15, மத்தியபிரதேசத்தில் 14, சட்டீஸ்கரில் 7, கேரளம்
மற்றும் காஷ்மீரில் 5 என்ற எண்ணிக்கையில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.