சன.28,2013. பிப்ரவரி மாதம் 7 முதல் 11 வரை 21வது உலக தொழுநோயாளர் தினம் சிறப்பிக்கப்படுவதையொட்டி
அதற்கென பரிபூரணப் பலனை அறிவித்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத் துறை. இந்த
5 நாட்களில் வழங்கப்படும் பரிபூரணப் பலன் மூலம் பாவங்களுக்கானத் தற்காலிகத் தண்டனைகளிலிருந்து
மன்னிப்புப் பெறமுடியும். நோயாளிகளுக்கானப் பணிகளில் ஈடுபடுவோர், அவர்களுக்கானப் பிறரன்புச்
சேவைகளை ஆற்றுவோர், இறைவன் கற்பித்த செபத்தைச் செபித்து, விசுவாசப்பிரமாணத்தை அறிக்கையிட்டு,
பாவத்திலிருந்து விடுதலைபெறும் உணர்வுடன் அன்னைமரியை வேண்டும்போது, இந்தப் பரிபூரணப்
பலன் கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாவத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு
வாழும் நோயாளிகளுக்கும் இந்த பரிபூரணப் பலன்கள் கிட்டும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப்
பரிபூரணப் பலனுக்கு இன்னும் சில செயல்முறைகளையும் கொடுத்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத்
துறை.