சன.28,2013. ஆப்ரிக்காவில் வளர்ச்சி இடம்பெறவும் வன்முறை எனும் சக்கரச்சுழற்சி இடம்பெறாமல்
இருக்கவும், பல இலட்சக்கணக்கான மக்களின் வறுமை நிலைகள் அகற்றப்படுவதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். எத்தியோப்பியாவில்
இடம்பெற்ற ஆபரிக்க ஒன்றிப்பு அவைக்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர், ஆப்ரிக்கக்
கண்டம் தனக்குள்ளேயே இருக்கும் சவால்களுக்கு தீர்வு காண முயல்வதன் மூலம் வளர்ச்சி, சமூக
நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளில் உலக குறிக்கோள்களுக்கு உதவ முடியும்
என்றார். ஆப்ரிக்கக் கண்டத்தின் பல நாடுகள், ஏழ்மை அகற்றல், கல்வி, தாய்-சேய் நல ஆதரவு,
பாலின சரிநிகர்தன்மை, சுற்றுச்சூழல் நிலையான தன்மை, எயிட்ஸ் நோய் குறைப்பு போன்றவைகளில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார் பொதுச்செயலர்
பான் கி மூன்.