வத்திக்கான் தொலைக்காட்சி மையத்திற்குப் புதியதலைவர்
சன.22,2013. வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் புதியதலைவராகஇத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டபேரருட்திரு
Dario Edoardo Viganòவை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கத்தோலிக்க திருஅவைக்கும்
திரையுலகிற்கும் இடையேயுள்ள உறவு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ள பேரருட்திரு Edoardo
Viganò, உரோம் நகரின் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதுநாள்வரை வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, திருப்பீடப் பேச்சாளரும் வத்திக்கான்
வானொலி இயக்குனருமானஇயேசுசபை அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி பணியாற்றி வந்தார். மேலும்,
திருப்பீட பத்திரிகை அலுவலகத்தின் துணை இயக்குனராக முனைவர் Angelo Scelzoவை இச்செவ்வாய்க்கிழமையன்று
நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். முனைவர் Scelzo இதுநாள்வரை திருப்பீட சமூகத்தொடர்பு
அவையின் நேரடிச்செயலராகப் பணியாற்றி வந்துள்ளார்.