இலங்கையில் 50 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய அபாயம்
சன.22,2013. இலங்கையில் 2050ம் ஆண்டளவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயினால்
பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அந்நாட்டு நலஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியரில் 10 முதல் 15 விழுக்காட்டினர் நீரிழிவு நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய்கள்
மற்றும் புற்று நோய் போன்ற தொற்றா நோய்களினால் நாள்தோறும் 650 பேர் உயிரிழக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமை, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை போன்ற
காரணங்களினால் இவ்வாறு தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன எனவும் கூறப்படுகின்றது.