2013-01-22 15:37:19

அமெரிக்க ஆயர்கள் : Roe v Wadeன் 40வது ஆண்டு நிறைவையொட்டி செபமும் தவமும்


சன.22,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கருக்கலைப்பைச் சட்டப்படி அங்கீகரித்த Roe v Wade என்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 40வது ஆண்டு நிறைவு இச்செவ்வாயன்று இடம்பெற்றவேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கர் செபமும் தவமும் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள்.
இந்த 40ம் ஆண்டு நிறைவையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவான பணிக்குழுத் தலைவர் கர்தினால் Sean O’Malley வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளார்.
இந்த 40வது ஆண்டையொட்டி இடம்பெறும் 9 நாள்கள் செபம், தவம் மற்றும் திருப்பயணங்களில் கத்தோலிக்கர் பங்கு கொள்ளுமாறும் கேட்டுள்ளார் கர்தினால் O’Malley.
கருக்கலைப்பின் தீமை கற்பனைக்கெட்டாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும், குணப்படுத்தலையும் புதுப்பித்தலையும் இயேசு நடத்துகிறார் எனவும் கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிப்பட்டதிலிருந்து, 5 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட கருக்கலைப்புகள் இடம்பெற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.