ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் என்ணிக்கை இங்கிலாந்தில் குறைந்துள்ளது
சன.21,2013. போதிய காற்றோட்ட வசதியில்லாத பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு இங்கிலாந்தில்
கொண்டுவரப்பட்ட தடையைத் தொடர்ந்து அந்நாட்டில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின்
என்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2007ம் ஆண்டு
ஜூலை மாதம் இங்கிலாந்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்ட அடுத்த ஆண்டிலேயே ஆஸ்துமாவால் பாதிக்கப்படும்
குழந்தைகளின் எண்ணிக்கை 12 விழுக்காடு வரை குறைந்ததாகக் கூறும் இவ்வாய்வு, அதற்கடுத்த
ஒவ்வோர் ஆண்டும் மேலும் 3 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கிறது. உணவு விடுதி போன்ற
பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை கொண்டு வந்துள்ளதன் மூலம் வீடுகளுக்குள் புகைப்பிடிப்பது
அதிகரிக்கும் என்ற அச்சம் தற்போது பொய்யாக்கப்பட்டு, புகைப்பிடித்தலின் தீமைகள் குறித்த
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.