2013-01-19 15:31:02

புனிதபூமியின் அமைதிக்காக 3,000 நகரங்களில் செபங்கள்


சன.19,2013. இம்மாதம் 27ம் தேதியன்று உலகின் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நகரங்களில் புனித பூமியின் அமைதிக்காகச் செபங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித பூமியின் அமைதிக்காக 24 மணி நேரங்கள் இடம்பெறவிருக்கும் செப வழிபாடுகளில் 2012ம் ஆண்டைவிட இவ்வாண்டில் மேலும் 500 நகரங்கள் இணைந்துள்ளன.
போலந்தின் நாத்சி Auschwitz-Birkenau வதைப்போர் முகாம் விடுதலை அடைந்த 1945ம் ஆண்டு சனவரி 27ம் நாளே, புனித பூமியின் அமைதிக்காகச் செபிக்கும் நாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.