2013-01-19 15:34:31

ஐ.நா.பொதுச்செயலர் : ஆயுதக்களைவு நடவடிக்கையில் இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்


சன.19,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவிலுள்ள பன்னாட்டுப் படிப்புக்களுக்கான Monterey நிறுவனத்தில் உரையாற்றிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், ஆயுதக்களைவு நடவடிக்கையில் உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அணு, உயிரிய மற்றும் வேதிய ஆயுதங்கள், சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுதங்கள் உட்பட அனைத்துவிதமான ஆயுதங்கள் களையப்படவும், அவை விநியோகிக்கப்படாமல் இருக்கவும் உடனடியாகச் செயலில் இறங்குமாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
இதில் காலம் தாழ்த்தத் தாழ்த்த, பயங்கரவாதிகளால் அந்த ஆயுதங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஆபத்து பெரியதாக இருக்கும் என்றும் எச்சரித்த பான் கி மூன், ஆயுதக்களைவு விடயத்தில் ஒவ்வொரு நாடும் முந்திக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.