ஹாங்காக்கில் 30 கிறிஸ்தவ இளையோர், கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரத்திற்கு அர்ப்பணம்
சன.18,2013. இவ்வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரத்தின்
தொடக்க நிகழ்வாக, “புதிய தோழமையையும் ஒன்றிப்பையும் நோக்கி” என்ற தலைப்பில் ஹாங்காக்கின்
30 கிறிஸ்தவ இளையோர் ஒன்றுகூடி செபித்து சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். கத்தோலிக்க,
ஆங்லிக்கன், பெந்தக்கோஸ்து மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த, 18க்கும் 35 வயதுக்கும்
இடைப்பட்ட 30 இளையோர் தங்களது அனுபவங்களை மட்டுமல்லாமல், சேர்ந்து செபித்து அதில் கிடைத்த
நல்ல சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். “கடவுள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?”
என்ற தலைப்பில் இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரம் இவ்வெள்ளியன்று உலகெங்கும்
தொடங்கியுள்ளது.