2013-01-18 15:08:35

மியான்மாரில் ஊடகச் சுதந்திரம் இன்னும் அதிகமாக வழங்கப்பட அழைப்பு


சன.18,2013. மியான்மாரில் நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படாமல் இருந்த ஊடகச் சுதந்திரத்தில் முன்னேற்றம் காணப்படுவதை உறுதி செய்யும் விதத்தில், பத்திரிகையாளர்கள் குறித்த விதிமுறைகளில் மாற்றம் இடம்பெறுமாறு, எல்லைகளற்ற நிருபர்கள் என்ற அமைப்பு கேட்டுள்ளது.
பாரிசை மையமாகக் கொண்டு இயங்கும், நிருபர்களின் உரிமைக்கான இந்த அமைப்பு, முதல் முறையாக அந்நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதையும் விவரித்துள்ளது.
மியான்மாரில் 300க்கும் அதிகமான தினத்தாள்கள் இருந்தாலும், ஏறக்குறைய 30 தினத்தாள்களே செய்திகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.