2013-01-18 15:10:46

கொலம்பியாவில் பங்குக்குரு ஒருவர் கொலை


சன.18,2013. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 55 வயதாகும் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் இப்புதனன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டுள்ள El Albergue பங்குக்குரு José Francisco Velez Echeverri, சமூகநலப் பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வந்தவர் எனவும், இவருக்கு எதிரிகள் இல்லை எனவும் பங்கு மக்கள் கூறியுள்ளனர்.
திருட்டே இக்கொலைக்கு காரணம் எனக் காவல்துறை சந்தேகிக்கின்றது.
அமெரிக்கக் கண்டத்தில் கத்தோலிக்க மேய்ப்பர்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதிகரித்து வருவதாக Fides செய்தி நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கொலம்பியாவில் 2012ம் ஆண்டில் ஒரு குருவும், 2011ம் ஆண்டில் 6 குருக்களும் ஒரு பொதுநிலை விசுவாசியும், 2010ம் ஆண்டில் 3 குருக்களும் ஒரு துறவியும், 2009ம் ஆண்டில் 5 குருக்களும் ஒரு பொதுநிலை விசுவாசியும் கொல்லப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.