ஆஸ்திரேலியாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியர்கள் குடியேற்றம்
சன.15,2013. ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவிலிருந்து மக்கள்
ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கின்றனர் என்று மரபணு குறித்த ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனிதர்கள் வந்து
குடியேறிய பின்னர் அக்கண்டம் பெருமளவு தனித்துவிடப்பட்டிருந்தது, பின்னர் 1800களில் ஐரோப்பியர்கள்
அங்கு வந்து குடியேறியுள்ளனர் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், ஆஸ்திரேலியப் பூர்வீகஇன
மக்களின் மரபணுச் சோதனைக்குப் பின்னர் வெளியான தகவலின்படி, அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்து
மக்கள் வந்து குடியேறியிருப்பதாகத் தெரிய வருகிறது. ஏறக்குறைய 35 ஆயிரம் முதல் 45
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் நியுகினி மக்களுக்கு இடையே மரபணுத்
தொடர்பு இருந்தது எனவும், அக்காலத்தில் இவ்விரு பகுதிகளும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன
எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.