2013-01-14 16:00:31

இந்தியாவில் 33,000 சிறார்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்கு


சன.14,2013. இந்தியாவில் சிறார்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது.
2011ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும், 16லிருந்து, 18 வயதுக்குட்பட்ட 33,000 சிறார்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், இவற்றில் பெரும்பாலானவை, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 1419 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான், சிறார்கள் மீது, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.