சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பாதரசம் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தல்
சன.11,2013. தங்கச் சுரங்களில் தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் பாதரசத்தால்
ஆப்ரிக்க, ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலுள்ள மக்கள், நலவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல்
பாதிப்பை அதிகம் எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா.சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
தங்கச் சுரங்களில் பயன்படுத்தப்படும் நச்சுகலந்த பாதரசம் சுற்றுப்புறச்சூழலில் கொட்டப்படும்
அளவு 2005ம் ஆண்டிலிருந்து இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றது என்று UNEP என்ற ஐ.நா.சுற்றுச்சூழல்
நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகிறது. மேலும், தற்போது 260 டன்கள் பாதரசம் ஆறுகளிலும்
ஏரிகளிலும் கொட்டப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.