2013-01-11 15:35:23

சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்லும் மக்கள் குறித்த விதிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்


சன.11.2013. சவுதி அரேபியாவுக்குத் தனது குடிமக்களை வேலைக்கு அனுப்பும் அரசுகள், தங்கள் நாட்டின் குடியேற்றதாரர் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தாவிட்டால் மற்றுமோர் Rizana Nafeek இறக்க வேண்டியிருக்கும் என சவுதி அரேபிய நபர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் நான்கு மாதக் குழந்தை ஒன்றைக் கொலை செய்த குற்றத்திற்காக, Rizana Nafeek என்ற இலங்கைப் பெண்ணின் கழுத்தை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஆசியச் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் அந்த சவுதி அரேபிய நபர்.
மேலும், சவுதி அரசின் இந்நடவடிக்கை குறித்து இலங்கை உட்பட பல நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Rizana Nafeek, 2005ம் ஆண்டில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டபோது அவருக்கு 17 வயதே ஆகியிருந்தது என்றும், 2007ம் ஆண்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர் தனக்கென வழக்கறிஞரை வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
Rizana Nafeek, தான் இக்கொலையைச் செய்யவில்லை என்றே கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.