2013-01-09 15:57:24

உலக மீட்பர் திரு உருவச் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடியே திருத்தந்தை பார்வையிடுவார்


சன.09,2013. இவ்வாண்டு ஜூலை மாதம் பிரேசில் நாட்டில் உலக இளையோர் நாள் கொண்டாப்படும்போது, அந்நாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள உலக மீட்பர் திரு உருவச் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடியே பார்வையிடுவார் என்று Rio de Janeiro பேராயர் Orani Tempesta கூறினார்.
உலக நவீன அதிசயங்களில் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ள 100 அடி உயரமான உலக மீட்பர் உருவம் அமைந்துள்ள குன்று, நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களின்போது 24 மணி நேரமும் திறந்திருக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல நாடுகளின் இளையோர் அடங்கிய சிறு குழுக்கள் இந்தத் திரு உருவைச் சுற்றி நின்று உலக அமைதிக்காகச் செபிக்கும் நிகழ்ச்சிகள் உலக இளையோர் நாட்களில் நடைபெறும் என்றும் பேராயர் Tempesta தெரிவித்தார்.
20 இலட்சம் இளையோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இளையோர் நாள் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற மையக்கருத்துடன் கொண்டாடப்படும்.








All the contents on this site are copyrighted ©.