சன.07,2013. எய்ட்ஸ் நோயைத் தற்காலிகமாக கட்டுப்படுத்தும் தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு
பார்சலோனா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நோய்க்கு இன்னமும்
மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும்
மருந்துகளை தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வரும் நிலையில் எய்ட்ஸ் நோய்க்கான புதிய
தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்த
தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் எய்ட்ஸ் கிருமிகள் வளர்வது தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டு,
நோயாளிகள் நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எய்ட்ஸ்
கிருமிகள் உடலின் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேளையில், இந்த தடுப்பூசி எய்ட்ஸ் நோய்
கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியாக விளங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 32 எய்ட்ஸ்
நோயாளிகளுக்கு இச்சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்துவிட்ட நிலையில், விரைவில் இத்தடுப்பூசி
பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 3 கோடியே
40 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.