2013-01-05 15:04:09

திருத்தந்தை : நான்கு புதிய ஆயர்களுக்குத் திருநிலைப்பாடு


சன.05,2013. ஆண்டவரின் திருக்காட்சித் திருவிழாவான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிகழ்த்தும் திருப்பலியில் நான்கு அருள்பணியாளர்களை ஆயர்களாக உயர்த்தும் திருச்சடங்கை நிறைவேற்றுவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத் தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் இவர்கள் நால்வரில் ஒருவரான பேரருள்திரு Georg Gaenswein, திருத்தந்தையின் அந்தரங்கச் செயலராவார். 56 வயதாகும் Gaenswein, பாப்பிறை இல்ல நிர்வாகத்தின் தலைவராகவும் அண்மையில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.
மேலும், மற்ற மூவரில் ஒருவரான இத்தாலியர் பேரருள்திரு Vincenzo Zani(62) கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் செயலராகப் பணியாற்றி வருகிறார். இன்னும், நைஜீரிய நாட்டவர் பேரருள்திரு Fortunatus Nwachukwu(52), நிக்கராகுவா நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றி வருகிறவர். நான்காவது நபரான பேரருள்திரு Nicolas Thevenin(54), திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனேக்குச் செயலராகப் பணியாற்றியவர் மற்றும் திருப்பீடத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.