2013-01-05 15:17:57

ஜெர்மனியில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிற்சாலை குறித்து ஆயர்கள் கண்டனம்


சன.05,2013. ஜெர்மனியில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிற்சாலை குறித்துக் குறைகூறியுள்ள அதேவேளை, உலகில் ஆயுதம் தாங்கிய சண்டைகள் இடம்பெறுவதை நிறுத்துவதற்குத் தங்களை மிகுதியாக அர்ப்பணிக்குமாறு அந்நாட்டினரை வலியுறுத்தியுள்ளனர் ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள்.
உலக அமைதி நாளுக்கென ஜெர்மன் ஆயர் பேரவையின் சார்பில் 24 பக்க செய்தி வெளியிட்டுள்ள Freiburg பேராயர் Robert Zollitsch, அமைதி என்பது அரசியல்வாதிகளின் வேலை மட்டுமல்ல, மாறாக, வளம்கொழிக்கும் தொழிலாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும்போது அமைதி குறித்த ஆர்வம் நம்மைத் தட்டி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகில் ஆயுத ஏற்றுமதியில், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெர்மனி இருக்கின்றது என்று Der Spiegel வார இதழ் குறிப்பிட்டுள்ளது.
ஜெர்மனியில் ஆயுதத் தொழிற்சாலைகளில் எண்பதாயிரம் பேர் வேலை செய்கின்றனர். ஆயுத ஏற்றுமதியால் ஆண்டுக்கு 180 ஆயிரம் கோடி டாலர் இலாபம் கிடைக்கின்றது என்றும் Der Spiegel இதழ் கூறியுள்ளது.
மேலும், ஜெர்மன் ஆயர் பேரவையின் இச்செய்தி குறித்துப் பேசிய Freiburg உயர்மறைமாவட்டப் பேச்சாளர் Robert Eberle, ஆயுத ஏற்றுமதி தொழில் செய்வோர் மத்தியில் திருஅவையின் குரல் கேட்கப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.