ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இலங்கையர் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர், ஐ.நா
சன.05,2013. உலகில் வேறு நாடுகளில் புகலிடம் தேடும் மக்களில் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள
நாடுகளில் இலங்கை 12வது இடத்தை வகிக்கின்றது என ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகின்றது. 44
தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளில் கடந்த ஆண்டில் 8,521 இலங்கை மக்கள் புகலிடம் தேடியதாகவும்,
இவ்வெண்ணிக்கை 2010ம் ஆண்டைவிட சற்றுக்குறைவு எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது. மேலும்,
இலங்கையில், சிறார் துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய தினம் சனவரி 4ம் தேதியன்று ஆண்டுதோறும்
கடைப்பிடிக்கப்படும் என, தேசிய சிறார்ப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது