2013-01-03 15:04:58

உலக இளையோர் நாளையொட்டி பிரேசில் நாட்டின் ஏற்பாடுகள்


சன.03,2013. இவ்வாண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் Rio de Janeiro நகரில் நடைபெற உள்ள உலக இளையோர் நாளையொட்டி, அந்நாட்டின் மற்றொரு பெருநகரான Sao Paoloவில் 40,000க்கும் அதிகமான இளையோர் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கலந்து கொள்ளும் இந்த முக்கிய நிகழ்வுக்கென பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தரும் இளையோரை வரவேற்க, அந்நாட்டின் பல குடும்பங்கள் தயாராக உள்ளன என்று இக்கூட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான அருள்தந்தை José Roberto do Prado கூறினார்.
ஏனைய நாடுகளில் இருந்து வரும் இளையோருடன் தொடர்பு கொள்வதற்கென அடிப்படை தகவல் பரிமாற்றங்கள் அடங்கிய பன்மொழி கையேடு ஒன்று தயாராகி வருவதாகவும் அருள்தந்தை Roberto கூறினார்.
இளையோரைத் தங்க வைப்பதற்கென்று முன்வரும் குடும்பங்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாகவும் உலக இளையோர் நாளின் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.