2013-01-03 15:02:16

2012ம் ஆண்டு 20 இலட்சம் திருப்பயணிகள் திருத்தந்தையைக் கண்டனர்


சன.03,2013. கடந்த 2012ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்துகொண்ட நிகழ்வுகளில் 20 இலட்சம் திருப்பயணிகள் அவரைக் கண்டனர் என்ற தகவலை திருத்தந்தையின் இல்ல அலுவலகம் வெளியிட்டுள்ளது.
திருத்தந்தையின் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் 23,51,200 பேர் என்றும், இவர்களில் 12,56000 பேர் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரைகளிலும் 4,47000 பேர் திருத்தந்தை வழங்கிய புதன் பொது மறைபோதகங்களிலும் கலந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை தலைமையேற்று நடத்திய திருவழிபாடுகளில் கலந்துகொண்டோர் 5,01,000 என்றும், ஏனையக் கூட்டங்களில் கலந்துகொண்டோர் 1,46,800 பேர் என்றும் கூறப்படுகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பேற்ற 2005ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு கணக்கெடுப்பின்படி, அவரது நிகழ்வுகளில் கடந்த எட்டு ஆண்டுகள் பங்கேற்றோரின் எண்ணிக்கை 2 கோடியே, 5 இலட்சத்து 44,970 பேர் என்ற விவரம் வத்திக்கான் நாளிழதலான L'Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.