2012-12-29 15:04:04

திருமணம் குறித்துப் பேசுமாறு Westminster பேராயர் வலியுறுத்தல்


டிச.29,2012. ஒரு குடும்பத்தின் இதயமாக இருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள திருமணம் குறித்து பேசுவதற்கு உண்மையிலேயே இதுவே தக்க தருணம் என்று இங்கிலாந்தின் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
டிசம்பர் 30, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப விழாவையொட்டி Westminster உயர்மறைமாநிலத்தின் 214 கத்தோலிக்க ஆலயங்களிலும் வாசிப்பதற்கென பேராயர் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்த இந்தக் கண்ணோட்டமானது, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் விசுவாசமான அன்பில் வேரூன்றப்பட்டது, இது திருமணத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் பேராயரின் அறிக்கை கூறுகின்றது.
மேலும், அடுத்த தலைமுறையைப் பொறுப்புள்ள விதத்தில் பெற்றெடுத்து அன்பினால் அவர்களை வளர்ப்பதையும் இது உள்ளடக்கியுள்ளது எனவும் கூறியுள்ளார் பேராயர் நிக்கோல்ஸ்.







All the contents on this site are copyrighted ©.