டிச.28,2012. உலகிலேயே அதிவேக இரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. எட்டு மணி
நேரத்தில் 2,298 கி.மீ. தூரம் செல்லும் இந்த இரயில் சேவையினால் அந்நாட்டின் பொருளாதாரம்
உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்ஸு வர்த்தக
நகரத்திற்கும் பீஜிங்கிக்கும் இடையேயுள்ள 2,298 கி.மீ. தூரத்தை 20 மணி நேரம் இரயிலில்
பயணம் செய்த மக்கள், தற்போது 8 மணிநேரத்தில் பயணம் செய்வதற்கு இந்த அதிவேக இரயில் சேவை
உதவியுள்ளது. இந்த இரயில் 2,298 கி.மீ தூரத்தை 300 கி.மீ. வேகத்தில் 8 மணி நேரத்தில்
சென்றடையும். மேலும், வழியில் 20 முக்கிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது
குறிப்பிடத்தக்கது