2012-12-27 15:16:40

வெறுங்கைகளுடன் தோன்றிய கிறிஸ்து மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் - மியான்மார் பேராயர் Charles Bo


டிச.27,2012. அதிகாரம், செல்வம், படைபலம் என்று தங்கள் கைகளை நிறைத்து வாழ்ந்த உலகத் தலைவர்கள் இன்று மக்கள் நினைவுகளில் வாழ்வதில்லை, மாறாக, வெறுங்கைகளுடன் குழந்தையாய்த் தோன்றிய கிறிஸ்துவோ மக்கள் மனங்களில் இன்னும் வாழ்கிறார் என்று மியான்மார் பேராயர் ஒருவர் கூறினார்.
Yangon உயர் மறைமாவட்டத்தின் பேராயரான Charles Bo, கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியை, தூய மரியா பேராலயத்தில் நிறைவேற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பல ஆண்டுகளாக இராணுவ அடக்கு முறைகளைச் சந்தித்து வந்துள்ள மியான்மார் நாட்டு மக்களுக்கு, அண்மையில் உருவாகியுள்ள மதச் சுதந்திரம் இறைவன் வழங்கியுள்ள பெரும் கொடை என்று பேராயர் தன் மறையுரையில் மகிழ்வுடன் கூறினார்.
பேராலயத்தில் நிகழ்ந்தத் திருவிழிப்புத் திருப்பலியில் கலந்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கும், எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiக்கும் பேராயர் Charles Bo அழைப்பு விடுத்திருந்தார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.