2012-12-27 13:21:40

டிச.27,2012. கவிதைக் கனவுகள் - வெற்றிப்பாதை - எழுதியவர் குணா
(அறுசுவை என்ற இணையத்திலிருந்து)


பிறர் சென்ற பாதையில்
நீ சென்றால் உன் கால்சுவடு
உனக்கே தெரியாது,

உனக்கென ஒருபாதை உருவாக்கு,
உன் உழைப்பை தினம் அதில் செயலாக்கு,

துயரங்கள் கண்டால் துறந்துவிடு,
தோல்விகள் கண்டால் மறந்துவிடு,

காலம் ஒரு நாள்
கனிந்து வரும்,
வெற்றி உன் வழி தேடி வரும்,
தோல்வி உன்னை விட்டு ஓடி விடும்,

உழைக்கும் உளியாய் என்றும்
இருந்துவிடு,
வரலாறு தானே உன் பெயரை
செதுக்கிக் கொள்ளும்...








All the contents on this site are copyrighted ©.