2012-12-26 14:45:45

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறுவனாக இருந்தபோது குழந்தை இயேசுவுக்கு எழுதிய மடல்


டிச.26,2012. குழந்தை இயேசுவே, விரைவாக உலகிற்கு வாரும், எனக்கும், என்னைப் போன்ற குழந்தைகளுக்கும் மகிழ்வைக் கொண்டுவாரும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறுவனாக இருந்தபோது மடல் ஒன்றை எழுதி இருந்தார்.
திருத்தந்தை ஏழு வயது சிறுவனாக இருந்தபோது எழுதிவைத்த ஒரு கடிதம் அவர் வளர்ந்துவந்த Marktl am Inn என்ற சிற்றூரில் திருவருகைக் காலத்தின் ஆரம்பத்திலிருந்து மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1934ம் ஆண்டு, திருத்தந்தை எழுதிய இக்கடிதத்தில், தனக்கு ஒரு திருப்பலி செபப்புத்தகமும், திருப்பலியில் குருக்கள் அணியும் ஆடைகளும் பரிசாக வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.
திருத்தந்தை வாழ்ந்துவந்த ஓர் இல்லம் புதுப்பிக்கப்பட்டபோது, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இக்கடிதம் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.