கர்தினால் ஜான் டாங் வெளியிட்டுள்ள கிறிஸ்து பிறப்புப் பெருவிழாச் செய்தி
டிச.26,2012. குழந்தைகளைத் தகுதியான வழிகளில் பெற்றெடுக்கவும், அவர்களை நல்ல முறையில்
வளர்க்கவும் தேவையான ஒரு சூழலை சமுதாயமும், அரசும் இணைந்து உருவாக்க வேண்டும் என்று ஹாங்காங்
கர்தினால் ஜான் டாங் கூறினார். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள
கர்தினால் ஜான் டாங், ஆண், பெண் என்ற இயற்கை உறவில் உருவாக்கப்படும் குடும்பங்களே குழந்தைகளுக்கு
ஏற்றது என்பதையும் எடுத்துரைத்தார். ஹாங்காங் பகுதியைக் கண்காணித்து வரும் சீன அரசு,
அப்பகுதிக்கு இன்னும் தகுந்த உரிமைகளை வழங்கவேண்டும் என்றும், குடியிருப்பு, நலவாழ்வு
பாதுகாப்பு, கல்வி மற்றும் ஒய்வுபெற்றோரைப் பராமரித்தல் ஆகிய கடமைகளில் அரசு இன்னும்
அதிக முயற்சி எடுக்கவேண்டும் என்றும் தன் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் ஜான் டாங். ஹாங்காங்
தலத் திருஅவையில் இவ்வாண்டு 3500க்கும் அதிகமானோர் கத்தோலிக்கத் திருமறையைத் தழுவியுள்ளனர்
என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.