2012-12-22 15:53:20

சிறார் இசைக்குழு ஒன்று உலகினருக்குக் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்


டிச.22,2012. ஆஸ்ட்ரியாவை மையமாகக் கொண்ட சிறார் இசைக்குழு ஒன்று இசையின் வழியாக விசுவாசக் கதைகளைச் சொல்லும் தங்களது பணியின் ஒரு பகுதியாக, உலகினர் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைச் சொல்லும் ஒலி-ஒளி இசைக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.
“நாங்கள் மெரி மெரி கிறிஸ்மஸ் பாடுகிறோம்” என்ற ஒலி-ஒளிப்படத்தை, KISI என்ற கடவுளின் பாடும் குழந்தைகள் குழு வெளியிட்டுள்ளது.
இந்த இசைக்குழு ஐந்து நாடுகளில் 400க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இக்குழுவினர் தங்களது இசையின் மூலம் நற்செய்தி அறிவித்து வருகின்றனர்.
Hannes, Birgit Minichmayr ஆகிய இருவரும் 1993ம் ஆண்டில் இந்த இசைக் குழுவை ஆரம்பித்தனர்.







All the contents on this site are copyrighted ©.