2012-12-20 15:45:45

புனித பூமிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறித்து மலேசிய அரசு இதுவரை விதித்திருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது


டிச.20,2012. புனித பூமிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறித்து மலேசிய அரசு இதுவரை விதித்திருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
புனித பூமிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை 700 ஆகவும், அவர்கள் இப்பயணத்திற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் 7 என்றும் மலேசிய அரசு இதுவரை கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
தற்போது, இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, புனித பூமிக்குச் செல்ல விரும்பும் அனைவரும் செல்லலாம் என்றும், இப்பயணத்திற்கு ஒவ்வொருவரும் 21 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மலேசிய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசிய நாட்டின் அரசு, வெளியிட்டுள்ள இந்த முடிவுகளை கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவ அமைப்புக்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.









All the contents on this site are copyrighted ©.