2012-12-19 15:37:35

ஒடிஸ்ஸா மக்களின் நம்பிக்கைப் பயணம் வருகிற ஆண்டில் இன்னும் எழுச்சியோடு தொடரும் - கட்டக் புபனேஸ்வர் பேராயர்


டிச.19,2012. ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் இந்த நம்பிக்கை ஆண்டில், தங்கள் நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்தவும், அர்ப்பண நோக்குடன் வாழவும் வேண்டும் என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அழைப்பு விடுத்துள்ளார்.
கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களின் உயிரும் உடைமைகளும் அழிக்கப்பட்டன. ஆனால், அவர்களின் விசுவாசம் என்ற கொடையை வன்முறையாளர்களால் பறிக்க முடியவில்லை என்று பேராயர் பார்வா, கிறிஸ்மஸ் விழாவையொட்டி, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காப்பதிலும், வளர்ப்பதிலும் அப்பகுதியில் பணிபுரியும் குருக்கள், மற்றும் துறவற சகோதர்கள், சகோதரிகள் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று பேராயர் பார்வா சுட்டிக்காட்டினார்.
நாம் கொண்டாடும் நம்பிக்கை ஆண்டு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு கோடை என்பதைத் தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய பேராயர் பார்வா, ஒடிஸ்ஸா மக்களின் நம்பிக்கைப் பயணம் வருகிற ஆண்டில் இன்னும் எழுச்சியோடு தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.