பாஸ்டன் கர்தினால் : அரசியலிலும் ஊடகத்துறையிலும் கத்தோலிக்கர் அதிகம் தேவை
டிச.18,2012. ஒரு சமுதாயத்தின் பொதுவாழ்வில் கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துச் செல்லக்கூடிய
கத்தோலிக்க அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று அமெரிக்க
ஐக்கிய நாட்டு பாஸ்டன் கர்தினால் Sean P. O’Malley கூறினார். ஒரு சமுதாயத்தில் பொதுவான
கருத்துக்களை உருவாக்கி பல்வேறு வழிகளில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளும்
ஊடகவியலாளரும் பொதுவாழ்வில் அவர்கள் கொண்டிருக்கும் முக்கிய பங்கை முதலில் புரியச் செய்ய
வேண்டுமெனவும் கூறினார் கர்தினால் O’Malley. அமெரிக்காவில் திருஅவை என்ற தலைப்பில்
வத்திக்கானில் நடைபெற்ற மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த அவர், கலாச்சாரத்தை நாம் அறிவிப்பதற்கு
கலாச்சாரங்கள் வெளிப்படும் இடங்களில் நாம் நற்செய்தியை அறிவிப்பவர்களாக இருக்க வேண்டுமெனவும்
கூறினார். இளையோருக்கு மறைக்கல்வியைப் போதித்து அவர்கள் தங்கள் அழைத்தலை அறிந்து கொள்வதற்கு
உதவ வேண்டிய முக்கிய கடமையைத் திருஅவை கொண்டுள்ளது எனவும் பாஸ்டன் கர்தினால் O’Malley
கூறினார்.