2012-12-18 15:29:25

ஐ.நா.பொதுச்செயலர் : உலக அளவில் 21 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்வு


டிச.18,2012. உலக அளவில் ஆண்டுதோறும் 21 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான அல்லது தரமான வாழ்வைத்தேடி தங்களது சொந்த நாடுகளைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர் என ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
டிசம்பர் 18, இச்செவ்வாயன்று அனைத்துலக குடியேற்றதாரர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், மனித உரிமை மீறல்கள், வறுமை, பாகுபாடு போன்ற காரணங்கள் உட்பட பல கடினமான சூழல்களால் இம்மக்கள் புலம்பெயர்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த மக்களுக்குத் தகுந்த ஆதரவு வழங்கப்பட்டால் இவர்கள் வாழும் சமுதாயங்களின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றுவார்கள் என்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
தேசிய அளவில் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் வகுக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர்.
உலகில் குடியேற்றதாரரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையொட்டி இரண்டாயிரமாம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியன்று கூடிய ஐ.நா.பொது அவை, அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தை உருவாக்கி, அந்நாள் டிசம்பர் 18ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.