டிச.17,2012. உயர்கல்வித்துறையிலான ஒத்துழைப்பு மற்றும் கல்வித்தகுதிகளையும் பட்டங்களையும்
அங்கீகரித்தல் போன்றவைகளில் திருப்பீடத்துக்கும், சீனக்குடியரசு என அழைக்கப்படும் தாய்வானுக்கும்
இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வத்திக்கானிலும்,
தாய்வான் தலைநகர் தாய்பேயிலும் இத்திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 23 பிரிவுகளை
உள்ளடக்கி ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தாய்பேயில் இரு நாடுகளுக்கும் இடையே
கையெழுத்தான இவ்வொப்பந்தம் கடந்த மாதம் 20ம் தேதி தாய்வான் நாடாளுமன்ற அவையில் ஒருமித்த
ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வத்திக்கான் சார்பில் கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின்
தலைவர் கர்தினால் Zenon Crocholewskiயும், தாய்வானின் சார்பில் கல்வி அமைச்சர் Wu Ching-Jiயும்
இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.