கேரள ஆயர்கள் : மதுபானங்களை அரசே விற்பதை நிறுத்த வேண்டும்
டிச.17,2012. சமூக, பொருளாதார, மற்றும் ஆன்மீக வழிகளில் மக்களைச் சுரண்டுவதுடன், அவர்களின்
உடல்நல மற்றும் உளரீதியான பாதிப்புக்களுக்கும் காரணமாகும் மதுபானங்களை அரசே விற்பதை நிறுத்த
வேண்டும் என்று கேரள ஆயர்கள், மாநில அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மதுபான விற்பனையில்
வியாபாரியாகச் செயல்படும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும் என்று தங்கள் அறிக்கையில்
கூறியுள்ள கேரள ஆயர்கள், மதுபானங்கள், மற்றும் போதைப்பொருட்கள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவது
எவ்விதம் என்பதைக் கூறும் 27 வழிகாட்டுதல் கருத்துக்களையும் அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர். அண்மைக்
காலங்களில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அடிப்படைப் பொருட்களின் விலையும், மருந்துகளின்
விலையும் கூடியுள்ளது குறித்தும் கவலையை வெளியிட்டுள்ள கேரள ஆயர்கள், அத்யாவசியப் பொருட்களின்
விலையைக் குறைக்க அரசின் தலையீடு தேவை எனவும் விண்ணப்பித்துள்ளனர்.