2012-12-15 16:09:20

முதியோர்கள் பிரச்சினையில்லை, மாறாக பங்களிப்பவர்கள் என்கிறார் ஆங்கிலிக்கன் தலைவர்


டிச.15,2012. சமூகத்திற்கு நேரடியாக ஏதாவது ஆற்றுபவர்களே பயனுடையவர்கள் என்ற நோக்குடன் முதியோர்களை ஒதுக்கி வைக்கும் சமுதாயப்போக்கு குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ்.
ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுமுன்னர், பிரிட்டன் பிரபுக்கள் அவையில் உரையாற்றிய ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைத் தலைவர் பேராயர் வில்லியம்ஸ், முதியோரைப் பிரச்சினையாக நோக்குவதே அவர்கள் தவறாக நடத்தப்படுவதற்கு மூலக்காரணமாக உள்ளது என்றார்.
சமூகத்தில் முதியோர் வெறும் பயணிகளாக நோக்கப்படாமல், பங்களிப்பவர்களாக நோக்கப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பேராயர் வில்லியம்ஸ்.







All the contents on this site are copyrighted ©.