2012-12-15 16:25:27

உயர் இரத்த அழுத்தமே முதல் உயிர் கொல்லி


டிச.15,2012. 21ம் நூற்றாண்டில் மக்களின் மரணங்களுக்கு காரணமான நோய்களுள், உயர் இரத்த அழுத்தம் என்பது முதன்மை இடத்தைக் கொண்டிருந்ததாக அனைத்து மருத்துவக்குழு நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளின்படி, உயர் இரத்த அழுத்தம் முதல் இடத்திலும், புகைப்பிடித்தல் இரண்டாம் இடத்திலும், போதைப்பானம் பயன்படுத்தல் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
உயிருக்கு எமனாக இருக்கும் 43 கூறுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்திய இக்குழு, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உப்பை உணவில் குறைப்பதன் மூலமும், பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலமும் உதவ முடியும் என தெரிவித்துள்ளது.
பசியால் மக்கள் உயிரிழப்பது அண்மைக்காலங்களில் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது அனைத்துலக மருத்துவர் குழு.








All the contents on this site are copyrighted ©.