உடல்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு
டிச.15,2012. உணவின்மையால் இறப்பவர்களைவிட, உடல்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம்
என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரியதோர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய
சத்துணவின்மையால் இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் வேளையில், உடற்பருமன்
காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்துள்ளனர். உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும்
உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. மக்களின் ஆயுட்காலம்
பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த
நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகக் குறையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.