2012-12-11 15:13:01

புனித பூமியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்படவேண்டுமானால் நீடித்த நிலையான அமைதி தேவை


டிச. 11, 2012. இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்படவேண்டுமானால் நீடித்த நிலையான அமைதி தேவைப்படுகின்றது என்றார் எருசலேமின் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி.
அமைதி என்பது இடம்பெறவில்லையெனில் பாதுகாப்பற்ற சூழல்கள் உணரப்பட்டு பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது என்ற ஆயர் ஷொமாலி, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ராயேலில் வாழும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் விசுவாசத்தின் சாட்சிகளாக இருக்க அழைப்புப் பெற்றுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
புனித பூமியில் கிறிஸ்தவர்களாகப் பிறப்பது என்பது சாதாரண நிகழ்வு அல்ல, மாறாக அது ஓர் அழைப்பு எனவும் எடுத்துரைத்தார் ஆயர்.
பாலஸ்தீனாவில் வாழும் கிறிஸ்தவர்கள் வேலைவாய்ப்புகள் இன்றியும், சுதந்திரமாக இயங்குவதற்கான கட்டுப்பாடுகளுடனும் வாழ்வது குறித்த கவலையையும் எருசலேமின் துணைஆயர் ஷொமாலி வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.