சித்ரவதைகளால் கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை அழிக்க முடியாது, பேராயர் ஜான் பாரா
டிச. 11, 2012. எவ்வித சித்ரவதைகளாலும் கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை அழிக்க
முடியாது, ஏனெனில் கந்தமால் என்பது மறைசாட்சிகளின் பூமி என்றார் கட்டாக் புபனேஸ்வர் பேராயர்
ஜான் பாரா. கந்தமால் அனுபவத்தைக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் 'நம்பிக்கையின் ஆண்டு'
என்பது ஒரு மிகப்பெரும் கொடை என்ற பேராயர், உடமைகள் சேதமாக்கப்பட்டு உறவினர்கள் கொல்லப்பட்டுள்ள
போதிலும் மக்களின் விசுவாசம் எவ்விதத்திலும் குறையவில்லை என்றார். கந்தமால் பகுதி
கிறிஸ்தவர்கள் இன்னும் தொடர்ந்து துன்பங்களையும், பாகுபாட்டு நிலைகளையும், ஏழ்மையையும்,
ஒதுக்கப்படல்களையும் அனுபவித்து வருகின்றபோதிலும், எந்த சித்ரவதைகளாலும் அவர்களின் விசுவாசத்தைத்
தடைசெய்ய முடியாது என்பதே அவர்கள் உலகுக்கு வழங்கும் செய்தியாக உள்ளது என மேலும் கூறினார்
பேராயர் பாரா.