மும்பையில் முத்திப்பெற்ற திருததந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் சிலை திறப்பு
டிச.10,2012. 26 ஆண்டுகளுக்கு முன் 1986ல் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், மும்பையின்
Vasai பகுதிக்கு திருப்பயணம் மேற்கொண்டதைச் சிறப்பிக்கும் விதமாக திருத்தந்தையின் திருஉருவச்
சிலை அப்பகுதி கோவில் ஒன்றில் திறக்கப்பட்டுள்ளது. முத்திப்பெற்ற திருத்தந்தை 2ம்
ஜான்பாலின் திரு உருவச்சிலையைத் திறந்து வைத்து Vasai யின் Barampurலுள்ள கொன்சாலோ கார்சியா
கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய இந்தியாவிற்கான திருப்பீடத்தூதர் சல்வத்தோரே பினாக்கியோ,
திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலை 1986ல் வரவேற்கும் வாய்ப்புப் பெற்ற மக்கள் பேறுபெற்றவர்கள்
என்று கூறினார்.