2012-12-10 15:54:15

அமெரிக்கத் திரு அவையின் அனைத்துலகக் கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு திருத்தந்தையின் செய்தி


டிச.10,2012. இன்றையப் பிரச்சனைகளுக்கான தீர்வை இயேசுகிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பிலேயேக் காணமுடியும், ஏனெனில் அதுவே அன்பு மற்றும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட வழிகளும் நடவடிக்கைகளும் உருவாகக் காரணமாகிறது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அமெரிக்கத் திருஅவையின் அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்துகொள்வோருக்கு வழங்கியச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டத் திருத்தந்தை, அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என இறை அன்பு நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
இறைவன் மீது மக்கள் கொண்டுள்ள தாகத்தை நினைவில்கொண்டு, அம்மக்களின் உள்மன வாழ்வைத் தூய்மைப்படுத்தி, பலப்படுத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.
இறைவார்த்தைக்கும் திருஅவைக்கோட்பாடுகளுக்கும் விசுவாசமாக இருப்பதன்வழி நம்மையே நாம் உருவாக்கி, அதன்வழி மற்றவர்களையும் வழிநடத்த உதவமுடியும் எனவும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.