அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்: இவ்வாண்டு 16 ஆயிரம் பேர் பலி
டிச.10,2012. இவ்வாண்டு ரயில் விபத்துக்களில் 16 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக இரயில்வே
அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. பல்வேறு இரயில்வே வளர்ச்சி மற்றும்
பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் , ஆண்டு தோறும் இரயில் விபத்துக்களால்
உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனக்கூறும் இரயில்வே அமைச்சகம், இரயில்வே மேம்பாலம்,
சாலையின் குறுக்கே செல்லும் இரயில்பாதைகள் ஆகியவற்றில் பல்வேறு இரயில்பாதைகளில் ஏற்படும்
விபத்துக்களால் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் 15, 934 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது. பல்வேறு
இரயில் விபத்துக்களில் கடந்த ஆண்டில் 14,611 பேர் பலியாகினர்.