2012-12-08 16:00:28

திருத்தந்தையின் அந்தரங்கச்செயலர் திருப்பீட இல்ல நிர்வாகத் தலைவராகிறார்


டிச.08,2012. இதுநாள்வரை திருத்தந்தையின் அந்தரங்கச் செயலராகப் பணியாற்றி வந்த பேரருட்திரு Georg Gänsweinஐ பேராயராக உயர்த்தி, திருப்பீட இல்ல நிர்வாகத் தலைவராக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீட இல்ல நிர்வாகத்தலைவராகச் செயபட்டுவந்த பேராயர் ஜேம்ஸ் ஹார்வி கர்தினாலாக உயர்த்தப்பட்டு, உரோம் நகரின் புனித பவுல் பேராலய தலைமைக்குருவாகவும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரருட்திரு Gänswein அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் Waldshut எனுமிடத்தில் 1956ம் ஆண்டு பிறந்த புதிய பேராயர் Gänswein, 1996ம் ஆண்டு முதல் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தில் பணியாற்றத் துவங்கி, 2005ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதிலிருந்து அவரின் அந்தரங்கச் செயலராகத் தொடர்கிறார்.
இவருக்கு ஜெர்மன், இத்தாலியம், இலத்தீன், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், இஸ்பானியம் ஆகிய மொழிகள் தெரியும்.








All the contents on this site are copyrighted ©.