இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கைகள் பொய்யாகியுள்ளதாக யாழ் ஆயர் கவலை
டிச.08,2012. இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில் குடியரசும், நல்லிணக்கமும் இடம்பெறும்
என தமிழர்கள் காத்திருக்க, அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பிரதிநிதிகள் குழுவிடம்
தெரிவித்துள்ளது யாழ் ஆயர் வழிகாட்டுதலின் கீழான குழு. ஜப்பான், தென்னாப்ரிக்கா, இத்தாலி,
அமெரிக்கா உட்பட 13 நாடுகளின் பிரதிநிதிகள் இச்சனிக்கிழமை காலை யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகத்தின்
வழிகாட்டுதலின் கீழான குழுவைச் சந்தித்து உரையாடியபோது, தமிழ்மக்களின் ஏமாற்றம் குறித்த
கவலை வெளியிடப்பட்டது. போருக்குப்பின்னர் நாட்டில் ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமைகளும்
அதிகரித்துள்ளது எனவும், மக்கள் தங்கள் தனித்துவங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உறுதிகள்
இல்லை எனவும், தமிழர் பகுதிகளில் இராணுவத்தினரின் அதிகப்படியான இருப்பு குறைக்கப்படவேண்டும்
எனவும் ஆயர் வழிகாட்டுதலின் கீழான இக்குழு ஐ.நா. பிரதிநிதிகளிடம் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்தது.