2012-12-07 16:03:13

பிலிப்பின்ஸ் புயலால் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருத்தந்தையின் செய்தி


டிச.07,2012. Bopha புயலால் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தன் அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் Jose Palma அவர்களுக்கு இவ்வியாழனன்று செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களைக் காணும் நம் உள்ளங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன, நமது பிறரன்புச் செயல்கள் அனைத்தும் இந்நேரத்தில் தேவைப்படுகின்றன என்று பேராயர் Palma கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டை இவ்வாண்டு தாக்கிய புயல்களிலேயே மிகவும் கடுமையானப் புயல் Bopha புயல் என்று சொல்லப்படுகிறது. இப்புயலால் இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இன்னும் 400க்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யக் கோரி, பேராயர் Palma 86 மறைமாவாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காரித்தாஸ் அமைப்பும், பன்னாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களும் Bopha புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.