வத்திக்கான் அருங்காட்சியகம் உரோம் நகரில் நடத்தும் UNESCO கருத்தரங்கு
டிச.06,2012. கத்தோலிக்கத் திருஅவை தன் பாரம்பரியத்தின் நினைவுகளை வரலாறு வழியாகவும்,
அரும்பொருள் பாதுகாப்பின் வழியாகவும் வளர்த்துவந்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர்
கூறினார். டிசம்பர் 5, இப்புதன் முதல் இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் வத்திக்கான் அருங்காட்சியகம்
நடத்தும் ஓர் கருத்தரங்கில் உரையாற்றிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் Antonio Paolucci
இவ்வாறு கூறினார். ஐ.நா.அவையின் கல்வி, கலாச்சார அமைப்பான UNESCOவும், HERITY எனப்படும்
ஓர் பன்னாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கு, வத்திக்கான் அருங்காட்சியகத்தில்
நடைபெறுவது மிகவும் பொருத்தமானது என்று இயக்குனர் Paolucci எடுத்துரைத்தார். உலகப்
புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தின் 500ம் ஆண்டு நிறைவை, அக்டோபர் மாதம் கொண்டாடியபோது,
அச்சிற்றாலயம் என்ற கருவூலத்தைக் குறித்து திருத்தந்தை பேசிய வார்த்தைகளை Paolucci தன்
உரையில் சுட்டிக்காட்டினார். இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பன்னாட்டு உறுப்பினர்கள்
இவ்வியாழன் பிற்பகலில் இப்புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தைப் பார்வையிட்டனர்.